Monday 3 May 2010

Norway election results - Transnational Government of Tamil Eelam - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக தெரிவான நோர்வே பிரதிநிதிகள்













Tamiler danner transnasjonal regjering

Tamiler i Norge har valgt tre personer til den nye Transnasjonal regjering hvor representanter fra hele verden vil bli representert.

Etter at krigen på Sri Lanka tok en dramatisk slutt i mai i fjor, tok sentrale personer i den tamilske diasporaen initiativ til å forme en Transnasjonal Regjering med demokratiske virkemidler.

Følgende personer er valgt under valget som foregikk den søndag i fem regioner i Norge, i følge en pressemelding.

Jeyasri Balasubramaniam, kvinne 49 år
Murali Sivanandan, mann 46 år
Sivakanesan Thillaiampalam, mann 49 år

I alt 8 personer fra Norge kjempet om plass i det nye verdensrådet for tamiler.

3500 norsktamiler deltok under valget. Det er litt over 50 prosent av alle stemmeberettigede. Valget foregikk samtidig over hele verden. 135 representanter vil representere i verdensrådet for tamiler, i følge pressemeldingen.


நோர்வேயிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு 3 பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர்.

நேற்று (02.05.2010) நோர்வே தழுவிய நிலையில் நடைபெற்ற தேர்தலில் நோர்வேயின் கிழக்குப் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 6 வேட்பாளர்களும்> ஏனைய பிராந்தியங்களைப் பிதிநிதித்துவப்படுத்தி 2 வேட்பாளர்களுமாக மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

8 வேட்பாளர்களில் 3 வேட்பாளர்கள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நிறுத்தப்பட்ட 3 வேட்பாளர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

நோர்வேயின் கிழக்குப் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் ஜெயசிறி பாலசுப்ரமணியம் & முரளி சிவானந்தன் ஆகிய இருவர் தெரிவாகியுள்ளனர்

நோர்வேயின் ஏனைய பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களில் சிவகணேசன் தில்லையம்பலம் தெரிவாகியுள்ளார்.

பிரதம தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிய நோர்வேஜியரான சமூக மானிடவியல் துறை ஆய்வாளர் Eugene Guribye அவர்களால் தேர்தல் முடிவுகள் பிரகடனப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

நோர்வேயில் ஈழத்தமிழர்களின் குடிசனப்பரம்பலைக் கருத்திற் கொண்டு, நோர்வேயிலிருந்து தெரிவு செய்யப்படவேண்டிய 3 பிரதிநிதிகளில் இரண்டு பிரதிநிதிகள் நோர்வேயின் கிழக்கு பிராந்தியத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி கிழக்குப் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள ஏனைய பிராந்தியங்களைப் பிரதிநிதித்தும் வகையிலும் தெரிவு செய்யப்பட்டனர்.

நோர்வே முழுவதுமாக 3511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கை வருமாறு:

ஜெயசிறி பாலசுப்ரமணியம்: 2342 வாக்குகள்

முரளி சிவானந்தன்: 2321 வாக்குகள்

சிவகணேசன் தில்லையம்பலம்: 2449 வாக்குகள்

நோர்வே முழுவதுமாக 17 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து வேட்பாளர்களும் பிராந்திய அடிப்படையில் பெற்ற வாக்கு விபரங்களை www.tamilvalg2010.com இணையத்தளத்;தில் அறிந்து கொள்ளலாம்.

1) http://www.tamilvalg2010.com/node/66

2) http://www.tamilvalg2010.com/node/67

No comments:

Post a Comment