Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Thursday, 6 May 2010
தற்போதைய வெளிவிவகார அமைச்சரும் ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வும்
ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்) என்று சொன்னதுமே, விடுதலைப்புலிகளின் சமாதானப்பேச்சுக்களே நினைவில் வரும். அத்தனைதூரம் புலிகளின் ஒவ்வெரு பேச்சுக்களிலும் அரசு சார்பில் தலைமைதாங்கியவர்.
இதில் புலிகளின் சார்பில் ஈடுபட்டோரில், (அமரர்) திரு அன்ரன் பாலசிங்கம் மற்றும் (அமரர்) சுப தமிழ்ச்செல்வன் போன்றோர். தம்முடைய நிலையில் இனி வாய்பேச முடியாது என்பதனை நன்கு உணர்ந்த இலங்கை அரசானது, பேச்சுக்களில் ஈடுபட்ட இன்னும் இரு முக்கியஸ்தர்கள் என்ற வகையில் எதிர்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்படுகின்றமைக்கு, சர்வதேசத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று இருக்கின்றபோது, உள்ளாநாட்டில் மிஞ்சியுள்ள தற்போதை பிரதி அமைச்சரும், சர்வதேசத்தின் பார்வைக்கு முன்னாள் புலிகளின் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவருமான கருணா என்கின்ற திரு.வி.முரளிதரன் அவர்களை ஒருவாறு தனது கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொணர்ந்த போதிலும், புலத்தில் மிஞ்சியுள்ள ஒருவராகவும் சட்டத்தரணியாகவும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, புலத்தில் தனது நிலையினைக் காலூன்ற, மக்களின் பலத்தினை அரணாகக்கொண்டு இன்று நாடுகடந்த அரசை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு வி.உருத்திரகுமார் அவர்களை ஒரு வழிபண்ணவேண்டும் என்ற புதிய புலத்தின் அரசியல் போர் உத்திகளுக்காக இலங்கை, அரசால் தெரிவாகியிருக்கும் ஒரு புத்திஜீவியும் பழுத்த அரசியல் அனுபவசாலியுமான “ஜீ. எல். பீரிஸ்” என்ற இந்த மனிதரை நியமித்துள்ளது.
உள்நாட்டில், பலம்பொருந்தி ஆயுத அரசியலில் 2009வரை கால்பதழித்திருந்த புலிகளை, அடியோடு அழித்துவிட்டோம் என்று ஆணவம் கொண்டிருந்த போதிலும், “புலம்பெயர்ந்த புலிகளாக” “புலிகள் பெயர்ந்து தமிழர்களாக” உருவாக்கப்பட்ட கட்டமைப்பை எப்படி மண்ணோடு மண்ணாக்குவது என்ற முனைப்பு ஒருபுறமிருக்க… சர்வதேசத்தால் தனது முன்னைய புலிகளுடனான அனுபவத்தை வைத்து காய்களை பக்குவமாக நகர்த்துவதற்காகவே இவர் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றே இன்னொருபுறம் எண்ணத்தோன்றுகின்றது.
புலத்தின், மற்றும் புலிகளின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் மனக்கசப்புகளும் இலங்கை அரசை மேலதிகமாக மூச்சுவிட வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. கடந்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இந்த வருடம் ஐந்தாம் மாதம் வரையிலான ஒருவருடத்தில், இலங்கை அரசானது பல சர்வதேச அரசியல், உள்நாட்டு ஜனநாயக நகர்வுகளை மேற்கொண்டிருந்த போதிலும், தமிழர்களின் சார்பில் கட்டப்பட்ட கட்டமைப்பை ஒரு முழுவடிவத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பட்ட தமிழர்களின் பின்னடைவு, இலங்கை அரசின் சர்வதேச அரசியலில் அவர்களை முன்னடைய வைத்துள்ளது.
புலத்தில் இவ்வாறான தமிழர் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வோர், இலங்கைத்தேசியத்தை ஏலவே மாற்றி பிறிதொரு தேசியத்தில் இருப்பதால், அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையினையும் இலகுவில் எடுக்கமுடியாது போய்விட்டது. இருந்தபோதிலும் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இந்த முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் தேடப்படுவதென்பெது உண்மையே!
இப்போது இலங்கை அரசின் பார்வையானது, அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகடந்த கட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதாவது உள் மற்றும் வெளிசெயற்பாட்டில் இருந்தே, இலங்கை அரசின் இதற்கெதிரான சட்டபோக்குகளில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த நாடுகடந்த கட்டமைப்பபானது, புலிகளின் போக்கினை வளர்த்தெடுப்பதாகவோ, அல்லது புலத்தில் இருந்து நிதிகளைச் வசூலிப்பதில் சட்டத்திற்குப்புறம்பாக மேற்கொண்டாலோ, இலங்கை அரசிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய நடவடிக்கையாக காணப்பட்டாலோ அன்றி இந்த நாடுகடந்த அரசை இலங்கை அரசு எதிர்க்கப்போவதில்லை.
அவ்வாறான செயற்பாட்டை உற்று நோக்கிய இந்த அமைச்சர் “பீரீசை” பொறுப்பாக அமர்த்தியதற்கான காரணம் இப்போது மக்களுக்கு தெளிவாக விழங்கியிருக்கும். ஏற்கனவே அரசின் சார்பில் அணுவளவும் குறைவு படாத பாலித்தவை வைக்கவேண்டிய இடத்தில் ஏற்கனவே வைத்துள்ளமை சற்று அரசியல் வாதிகளை சிந்திக்கவைத்திருக்கும். அத்துடன் பாங்கிமூன் தொடர்பாக எதுகும் நான் செல்லவேண்டியது இல்லை, காரணம் அவர் யார், எந்த நாட்டையுடையவர், அந்த நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள மத மற்றும் நிதி, ஒப்பந்தங்கள் தொடர்பாக உள்ள ஈடுபாடுகள் அப்பப்பா!!!…
இவ்வாறு இருக்க, ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்) இலங்கையில் ஒரு பேராசிரியரும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதியும் ஆவார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்ததோடு, மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு கட்ட அரசவையிலும் பலமிக்க அதிகாரமுடைய அமைச்சினைக் கையாண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தற்போது அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் அதிகாரிகள், மிகத்திறனுள்ள ஒரு அரசியல் சாணக்கியமுள்ள இலங்கை அரச தலைவரை எதிர்த்தே எமது போராட்டம் தொடங்கப்போகின்றது என்பதனை நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.
உதாரணமாக சொல்லப்போனால், முன்னைய பாராளுமன்ற அனுபவமுள்ள ஒருவரையும் இந்தக்கட்டமைப்பு உள்வாங்கியிருப்பதென்பது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகக்கெகாண்டாலும், இன்னும் சில சந்தேகங்கள் எளாமல் இல்லை இந்த சந்தேகங்கள் உண்மையாகிவிடக்கூடாது என்பதற்காக இந்தப்பகுதியில் அவை இணைக்கப்படப்போவதில்லை.
அத்தோடு, இத்தனை காலமும் இருந்த வெளிநாட்டு அமைச்சர்களிலும் பார்க்க தற்போதுள்ள ஜீ.எல்.பீரிஸ் அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் துணுக்கு எழுதப்படுகின்றது. இதனை, அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் நடத்துனர்களும் அமைப்பாளர்களும் அறிந்து மிகப்பக்குவமாக காய்களை நகர்த்தும்படி அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
மேலும் , கடந்த தேர்தல்களில் (புலத்தில்) இடம்பெற்ற ஜனநாயகப்போக்கு வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும், சர்வதேச கணிப்பீட்டின்படி மக்கள் தொகையில் வாக்களித்தவர்களின் தொகையினை சர்வதேசக்கணிப்பாளர்கள் குறை கண்டுபிடிக்காதளவிற்கு அமைப்பதில் அதிக கவனம் செலுத்தும்படி வேண்டப்படுகின்றீர்கள்.
இலங்கை அரசின் மொளனத்தை அச்சமென்றோ, இயலாத்தன்மை என்றோ, அல்லது தமிழர்களின் போக்குச்சிறந்தது என்ற அடிப்படையிலோ, முட்டாள்தனமாக எனது எழுத்துக்கள் பாராட்டிய கருத்துக்களாக இருக்காது, எப்படி ஆரம்பத்தில் புலிகளின் நகர்வை அறியமுடியாது இலங்கை அரசு திண்டாடியதோ, அதுபோலவே இன்றுள்ள இலங்கை அரசின்போக்கு என்பதனை எச்சரிக்கையோடு, அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்துமாறு தமிழ்த்தலைவர்களை விழித்துக்கொள்ளச் சொல்கின்றேன்.
தற்போது மேய்ப்பனில்லாத ஆடுகளாக இருக்கும் தமிழர்களுக்கு ஒரே ஒரு தொடர்புச்சாதனமாக அமைந்திருப்பது இணையங்களே.அந்த இணையங்களின் சாதூர்யமான கருத்துக்களை வைத்தே தமிழர்கள் சர்வதேச சாணக்கியத்தை தமிழர்கள் புரிந்து கொள்ளவும், இலங்கை அரசின் சாணக்கியத்தை முறியடிக்கவும் வேண்டும்.
உண்மையில் இலங்கை அரசு புலிகளை முடக்கிவிட்ட வீராப்பில் தூங்கிக் கொண்டாலும், அதை நாம் தூக்கமாகக்கருதக்கூடாது, அது தூங்குவதுபோல் நடிப்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆமை வேகத்தில் நாம் சென்றாலும், முயல் வேகத்தில் செல்லும் இலங்கை அரசை தமிழர்கள் சார்பால் இந்த நாடுகடந்த அரசு வெல்லவேண்டும்.
சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு சார்பில் மேற்கொண்ட பத்திரிகை மானாடுகளில் அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தாவது, புலிகளும் நாடுகடந்த அரசும் ஒன்றே என்ற பாணியை கொணர முயற்சிப்பதில் இருந்து அரசு வேறுவழியில் இந்த நாடுகடந்த அரசிற்கெதிரான தனது காய்களை நகர்த்திவருகின்றது என்பது வெளிச்சம். அத்துடன், அமைச்சர் பிரிசால் வழங்கப்படுகின்ற கட்டளைகளை இலங்கைத்தூதராலயங்கள் உலகின் பல பாகங்களிலும் திடமாக மேற்கொள்வதோடு, உலக அரசுகளும் தமது நகர்வுகளை இவருடைய அழுத்தத்திலிருந்தே மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் இன்றுள் அரசியல் சூழலில் இந்நபர் மிகவும் முக்கிய காயக தமிழர்களுக்கு விழங்கள் போகின்றார். இதனை எதிர்கொள்ள நாடுகடந்த அரசு அவையைப்பலப்படுத்துவதிலும், பெருமைகொள்வதிலும் பார்க்க இதற்கு “முறியடிப்பு” முகங்கொடுப்பதில் அக்கறை அதிகம் செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து. –
தமிழர்களின் பலம்பொருந்திய சிறந்த,அழிக்க முடியாத சர்வதேச கட்டமைப்பை எதிர்பார்த்து… …-
அருகன், (5/05/2010)
தமிழீழத்தை அழித்தவர்களை புலம்பெயர் தமிழீழம் மறக்குமா? மன்னிக்குமா? பழிவாங்குமா?
எங்களிடம் இல்லாத பலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எங்களிடம் இருக்கின்ற பலத்தை வைத்துக்கொண்டு அந்த யுத்தக் குற்றவாளிகளை எப்படி பழிவாங்கலாம் என்று யோசிப்பதுதான் சாலச்சிறந்தது.
ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.
கைகளில் வெள்ளைக்கொடியை ஏந்தியபடி சரணடையச் சென்றவர்களைக் கூட சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள்ளிய கொடுரம் அரங்கேறியிருந்தது. போர்க்கைதிகளை படுகாயப்பட்ட போராளிகளை இரக்கமின்றி கொலை செய்த கொடுமை நடைபெற்றிருக்கின்றது. குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என்று எந்த பரிதாபமும் இல்லாமல் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகாமான அப்பாவித் தமிழ் மக்களை முற்கம்பி வேலிகளுக்குள் அடைத்து தனது வெற்றியைக் கொண்டாடிய அசிங்கம் எமக்கு நிகழ்ந்திருந்தது.
11 ஆயிரத்திற்கும் அதிகமான எமது உறவுகளை யாருடைய கண்களுக்கும் தெரியாமல் இன்னமும் சிறைகளுக்குள் மறைத்து வைத்து சித்திரவதை செய்து தமது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றது சிறிலங்கா தேசம்.
எம்மீதான இத்தனை கொடுமைகள் புரியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது. இந்த ஒரு வருட காலத்தில்; எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக அல்லது இந்த அநீதிகளுக்குப் பதிலாக எமக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கின்றோம்?
ஆம். எமது இனத்தின் மீதான ஒரு அழித்தொழிப்பு யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தின் மீதான ஒரு அப்பட்டமான இன அழிப்பு நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தை கருவறுத்தவர்களை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்படவில்லை என்றால் ஒரு இனம் என்று கூறிக்கொள்ளும் தகுதியை நாம் நிச்சயம் இழந்தவர்களாகிவிடுவோம்.
இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி எழலாம்.
எங்களால் என்ன செய்ய முடியும்? எங்களின் பலம்தான் அழிக்கப்பட்டுவிட்டதே? இனி எங்களால் எதைத்தான் செய்யமுடியும்? - இவ்வாறு நீங்கள் கேள்வி எழுப்பலாம்.
எங்களிடம் இல்லாத பலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்;. எங்களிடம் இருக்கின்ற பலத்தை வைத்துக்கொண்டு அந்த யுத்தக் குற்றவாளிகளை எப்படி பழிவாங்கலாம் என்று யோசிப்பதுதான் சாலச்சிறந்தது.
அப்படி என்னதான் பலம் எங்களிடம் இருக்கின்றது? எங்களை அழித்த பலவான்கனை பழிவாங்கக் கூடிய அளவிற்கு என்ன பலம் எங்களிடம் இருக்கின்றது?
அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் நடந்த சில சம்பவங்களை மாத்திரம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காண்பிக்கின்றேன். அதன் பின்னர் எங்கள் இனத்தின் மீது கொடுமை புரிந்தவர்களை எங்களிடம் இருக்கின்ற சிறிய பலத்தை வைத்துக்கொண்டு எப்படி எங்களால் பழிவாங்க முடியும்; என்று உங்களுக்கு நன்றாகவே புரியும் என்று நான் நம்புகின்றேன்.
கடந்த டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சிப்பி லிவினி(Tzipi Livni ) பிரித்தானியாவுக்கு பயணமாக இருந்த நேரத்தில் அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்தது.
பிரித்தானியாவில் வைத்து அவரைக் கைதுசெய்வதற்கான பிடியானையை பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்திருப்பதான செய்தி அவருக்குக் கிடைத்தது.
இஸ்ரேலின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் அனைவருக்குமே அது ஒரு பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது.
Tzipi Livni ஒரு சாதாரணமான பெண் அல்ல. இஸ்ரேல் தேசத்தின் அரசியலில் ஒரு முக்கிய அங்கம் வகிப்பவர்.
இஸ்ரேலின் எதிர்கட்சித் தலைவர்.
அவர் மீதான கைது ஆணையை அதுவும் இஸ்ரேலின் மிக முக்கிய நட்பு நாடான பிரித்தானியாவின் நீதிமன்றம் பிறப்பித்திருப்பது ஒரு பெரிய அதிர்ச்சியை இஸ்ரேலின் அனைத்து மட்ட அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.
எதற்காக இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் மீது லண்டன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது?
2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி இஸ்ரேலின் காசாப் பிரதேசம் மீது இஸ்Nலியப் படைகள் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. காஸ்ட் லீட் படை நடவடிக்கை (Operation Cast Lead) என்ற பெயரில் இஸ்ரேலிய முப்படைகளும் இணைந்து மேற்கொண்ட அந்த நடவடிக்கை மிகப் பெரிய அவலத்தை காசாப் பகுதியில் ஏற்படுத்தியிருந்தது. காசாப் பகுதியில் இருந்து இஸ்லாமிய கமாஸ் போராளிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இஸ்ரேலியப் படைகள் இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்:
2008 டிசம்பர் 27ம் திகதி முதல் 2009ம் ஆண்டு ஜனவறி மாதம் 18ம் திகதி வரை நடைபெற்ற இஸ்ரேலின் அந்த மூன்றுவார இராணுவ நடவக்கையில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 1400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். 50ஆயிரம் பலஸ்தீனர்களின் வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.
காசாப் பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட அந்த படை நடவடிக்கையை உலகம் முழுவதும் கண்துடைப்பிற்காக கண்டித்திருந்தாலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நிலைப்பாடு எடுத்திருந்தன.
இந்த இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் பாரிய போர் குற்றங்களைப் புரிந்ததாகவும் மனிதத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஐ.நா. கடுமையான கண்டணத்தை வெளியிட்டிருந்தது. சிவிலியன் மீது இஸ்ரேலியப் படைகள் எறிகணை மன்றும் குண்டு வீச்சுக்களை திட்டமிட்டே மேற்கொண்டதாகவும் பொஸ்பரஸ் குண்டுகள் உட்பட தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை அந்த இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலியப் படைகள் பாவித்ததாகவும் பலஸ்தீன மக்களை மனிதக் கேடயங்களாக இஸ்ரேலியப் படைகள் பாவித்ததாகவும் வைத்தியசாலைகள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடாத்தியதாகவும் ஐ.நா. உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன. ஆனாலும் வெறும் கண்டனங்கள் என்பதற்கு அப்பால் இஸ்ரேலை எவராலும் எதுவும் செய்துவிடமுடியவில்லை.
உலகம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க இஸ்ரேலின் படைநடவடிக்கையில் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அகதிகளாக வந்த சில பலஸ்தீனர்களும் பிரித்தானியாவில் உள்ள சில பலஸ்தீன அமைப்புக்களும் இணைந்து பிரித்தானியாவின் சட்டத்தின் கீழ் இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ஒன்றை மேற்கொண்டார்கள்: வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம் இஸ்ரேலின் Operation Cast Lead என்ற இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த Tzipi Livni இனைக் கைதுசெய்யும்படி பிடியானை பிறப்பித்தது. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைத்தால் அவரை உடனடியாகவே கைதுசெய்யும் நிலை இருந்தது.
இதேபோன்று காசாவிலும் மேற்குகரையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குற்றச் செயல்களுக்காக பிரித்தானியாவின் சட்டத்தில் காணப்படுகின்ற சில ஆரோக்கிமான சரத்துக்களைப் பயன்படுத்தி இஸ்ரேலியத் தலைவர்களை பிரித்தானியாவுக்குள் நுழையவிடாது சங்கடங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை பலஸ்தீன அமைப்புக்கள் அண்மைக் காலமாகவே மேற்கொண்டு வருகின்றன.
இதேபோன்று கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்தானியாவுக்கு விமானத்தில் வந்த இஸ்ரேலின் துணைப்; பிரதமர் மொஷா யாலோன் (Moshe Yaalon) விமானத்தை விட்டு பிரித்தானிய மண்ணில் கால்வைக்காமல் திரும்பிச் சென்ற சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு அவர் பாதுகாப்புத்துறை உயரதிகாரியாக பதவிவகித்த காலத்தில் காசாப்பகுதியில் இஸ்ரேலியப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலில் கமாஸ் அமைப்பின் ஒரு முக்கிய தலைவரும் அவரது மனைவி மற்றும் ஒன்பது பிள்ளைகளும் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்தக் கொலை தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள சில பலஸ்தீனர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் Moshe Yaalon இற்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரித்தானியப் பயணம் மேற்கொண்ட மொஷா யாலோன் (Moshe Yaalon) விமான நிலயத்தில் தரையிறங்கினால் கைதுசெய்யப்படும் நிலையில் வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லவேண்டி ஏற்பட்டது.
இதேபோன்று காசாவில் பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு கட்டளையிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட டொரோன் அல்மொக் (Doron Almog) என்ற முன்னாள் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிக்கு எதிராக பிரித்தரியாவில் உள்ள பலஸ்தீன அமைப்பொன்று பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தது. 2005 இல் அவர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்த பொழுது லன்டன் கீட்துரோ (Heathrow) விமான நிலயத்தில் அவர் கைதுசெய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்ததால் விமானத்தை விட்டு இறங்காமல் அதே விமானத்தில் அவர் இஸ்ரேல் திரும்பவேண்டி ஏற்பட்டது.
இதேபோன்று பிரித்தானியாவின் 1988 Criminal Justice Act இன்படி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகூட் பாரக்கை (Ehud Barak) கைதுசெய்யும்படியான ஆணையை பிரித்தானியா நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என்று சில பலஸ்தீன அமைப்புக்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் செயற்படுகின்ற இது போன்ற சில பலஸ்தீன அமைப்புக்களின் செயற்பாடுகள் பல்வேறு இராஜதந்திரச் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் இஸ்ரேலுக்கு உருவாக்கி வருகின்றது.
இத்தனைக்கும் பிரித்தானியா இஸ்ரேலின் மிகப் பெரிய ஒரு நட்பு சக்தி. இஸ்ரேலின் அத்தனை அராஜகங்களையும் ஆசீர்வதித்து வருகின்ற ஒரு நாடுதான் பிரித்தானியா. பிரித்தானியாவில் உள்ள அனேகமான அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் அனைத்துமே இஸ்ரேலின் பக்கம்தான் நிற்கின்றார்கள். இஸ்ரேலியத் தலைவர்கள் மீது பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பதை அவர்கள் அடியோடு எதிர்க்கின்றார்கள். ஆனாலும் பிரித்தானியாவின் நீதித்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாகச் செயற்படுகின்றதான ஒரு நிலையில் உள்ளதைப் புரிந்துகொண்ட சில பலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியாவின் நீதித்துறையை சரியான முறையில் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.
காசாவில் இஸ்ரேல் புரிந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை விட அதிக அளவிலான மிக மோசமான யுத்தக் குற்றங்கள் அதே காலப்பகுதியில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாஙங்கத்தால் புரியப்பட்டிருக்கின்றது. இப்படியான யுத்தக்குற்றங்கள் புரியப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை பிரித்தானியாவை மையமாகக்கொண்ட பல தொலைக்காட்சிகள் நிரூபித்தும் இருக்கின்றன. பிரித்தானியாவின் நாடாளுமன்றம் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் இதனைக் கண்டித்தும் இருக்கின்றன.
இன்று பிரித்தானியாவில் சுமார் மூன்று இட்சம் தமிழர்கள் வாழ்வதாக ஒரு கணிப்பீடு காண்பிக்கின்றது. ஈழத் தமிழரின் நலன்காக்கவென்று அங்கு பல அமைப்புகள் நிறுவனங்கள் செயற்பட்டும் வருகின்றன.
அப்படி இருந்தும் ஈழத் தமிழர்கள் மீதான ஒரு இன அழிப்பை மேற்கொண்ட கொலைகாரர்களுக்கு எதிராக ஏன் ஒரு வழக்கு கூட பிரித்தானிய நீதிமன்றத்தில் எம்மால் தாக்கல்செய்யமுடியவில்லை?
பேச்சுக்கள் அறிக்கைகளைக் கடந்து ஏன் எமது இனம் சார்ந்த அமைப்புக்களால் அடுத்தகட்டத்திற்கு நகர முடியவில்லை?
எமது உறவுகளை அழித்துவிட்டு அவர்களது பிணங்களின் மீது ஏறி நின்று வெற்றிப் பிரகடனம் செய்த எத்தனையோ சிறிலங்காத் தலைவர்கள் சிரித்தபடி எங்கள் முன்னால் வலம்வந்துகொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள சட்டங்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஏன் அவர்களை நாங்கள் பழிவாங்கக்கூடாது?
Et nytt land "Sør Sudan" kan oppstå
I januar 2011 kan det oppstå et nytt land i Afrika: Sør-Sudan.
I januar skal den sudanske befolkningen holde folkeavstemning om Sør-Sudan skal løsrive seg fra Sudan.
- Vi må forberede oss på at avstemningen vil føre til et nytt land i januar 2011. Det er det en stor mulighet for, sier Philip Crowley, en talsperson for regjeringen ifølge AFP.
De to landsdelene er forskjellige på mange måter, ikke minst når det gjelder befolkningen. Mens befolkningen i sør hovedsakelig er kristne, er majoriteten i nord arabere og muslimer.
- Ingen tid å miste
Skulle resultatet bli et selvstendig Sør-Sudan, står problemene i kø. Mange komplekse temaer står uløste, for eksempel hvor grensen skal gå mellom de to landene, og ikke minst må oljeressursene fordeles. Oljen finnes hovedsakelig i sør, mens den sendes via oljeledninger i nord. Fordelingen av oljen forventes å bli et at de største stridstemaene.
- Det er ingen tid å miste. Det er mange komplekse og viktige temaer som må løses, sier FNs spesialutsending til Sudan, Scott Gration.
Han møtte regjeringen i den sudanske hovedstaden Khartoum denne uken, i tillegg til politiske ledere i sør. Temaet er hvordan de skal klare å holde på den skjøre fredsavtalen fra 2005.
- Skulle sør bestemme seg for å løsrive seg, er vi bare seks måneder fra det punkt der vi har et nytt land, sier Crowley.
Valgfusk
Gration hadde mandag og tirsdag samtaler med den sittende presidenten, Omar al-Bashir. Han ble i april gjenvalgt etter det første demokratiske valget på 24 år.
Men gjennomføringen av valget ble amputert av at de største opposisjonspartiene boikottet valget, etter beskyldninger om at regjeringspartiet NCP (National Congress Party) skal ha fusket i forkant av valget.
Wednesday, 5 May 2010
UN failed to protect Tamil civilians - Lord Patten
Noting British foreign policy is unlikely to change after the May 6th election, and that United Nations is better at "normative diplomacy than at launching action on the ground," Lord Patton, current chancellor of University of Oxford, and who as European Commission External Relations Commissioner visited Kilinochchi during the ceasefire, said, while having endorsed the principle of Responsibility to Protect (R2P) to prevent atrocities, "UN was paralysed when political and diplomatic intervention was required to protect Tamil civilians in the Sri Lankan government campaign to wipe out the Liberation Tigers of Tamil Eelam," in an article in Financial Times.
Patten's comment on the candidates during Sri Lanka's Presidential elections reflects his views of Sri Lanka as a state with alleged complicity in war-crimes, and that International Community has to exercise strong economic pressure to constrain Colombo's behavior within international norms.
In a New York Times article in January 2010 Patten said that public in Sri Lanka is "faced with a choice between two candidates who openly accuse each other of war crimes," and adds, "[w]hoever wins, the outside world should use all its tools to convince the government to deal properly with those underlying issues to avoid a resurgence of mass violence....In short, this means not giving Colombo any money for reconstruction and development until we know how it will be spent. And if we see funds not being used as promised, it means not being afraid to cut them off untilwe know how it will be spent."
It is widely understood that the failure of a state to protect its own citizens is the threshold condition that triggers the R2P responsibility on the international community.
"The State has a primary responsibility to protect the individuals within it. Where the state fails in that responsibility, through either incapacity or ill-will, a secondary responsibility to protect falls on the wider international community. That, in a nutshell, is the core of the responsibility to protect (R2P) idea" and that "Sri Lanka is anything but an R2P," Gareth Evans, President, International Crisis Group, said during the eighth Neelan Tiruchelvam Memorial Lecture at International Centre for Ethnic Studies (ICES) in August 2007, well before the large scale massacre carried out by Colombo in May 2009.
Lord Patten's statement implicitly acknowledges that scale of the killings of Tamil civilians crossed the threshold levels to call for R2P intervention, and thereby, has added further fuel to the calls by several rights organizations for independent war-crimes investigations in Sri Lanka.
Sri Lanka’s military massacred as many as 40,000 Tamil civilians in the final onslaught against the Liberation Tigers in 2009, according to a former United Nations official with detailed knowledge of events.
Biography of Chris Patten
http://www.chrispatten.org.uk/biography.htm
Kilde: Tamilnet
பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கு, தமிழரின் போராட்டத்தை உணரவைத்த பிரித்தானிய தலைவிகள்
தொழிற்கட்சி மாநாட்டின் மைய மண்டபத்தில் நின்று " இலங்கையின் பொருட்களை புறக்கணியுங்கள் " என்று முழங்கிய சிவோன் மக்டொனா அம்மையாரை தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்திய அதே அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பெண் இலங்கை அரசை தூற்றும், அறைகூவலை விடுக்கும் அளவிற்கு , அதனை கண்டிக்கும் பிரேரணையை அக்கட்சியில் நிறைவேற்றும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழர்களுக்கு உற்சாகத்தைதருகின்றது.
தொழிற்கட்சியில் இவ்வாறான மாற்றத்திற்கு வழிசமைத்ததில் ஜோன் ரயன் அம்மையார் பெரும் பங்கு வகித்துள்ளார். தமிழர்கள் பயங்கரவாதிகள் அவர்களைஅணுகாதீர்கள் என அம்மையாருக்கு பலரும் கூறிய பொழுது, தமிழர்களின் நியாயங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் மனங்களை வெல்வதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
அதேவேளை தமிழர்களின் நியாயங்களை கென்சவேட்டிவ் கட்சிக்குள் எடுத்துச்சென்று அக்கட்சியோடு தமிழர்கள் உறவைப் பலப்படுத்த உறவுப்பாலமாக செயற்படுபவர் டாக்டர் ரேச்சல் ஜொய்ஸ் அம்மையாராவார். ஆளும் கட்சியாக தொழிற்கட்சி இருந்தமையால் தமிழர்களும் அக் கட்சியோடு கூட நெருங்கி வேலை செய்துள்ளார்கள்.
தற்போது ஆட்சி மாறும் என்ற நிலையில் கென்சவேட்விவ் கட்சியினுள்ளும் எமது நண்பர்கள் பெருக வேண்டும் . அதனை செய்யக்கூடிய வல்லமை ரேச்சல் அம்மையாருக்கு உண்டு என்பதை ஒரு குறுகிய காலத்திற்குள் அவர் நிருபித்துள்ளார்.
பிரித்தானிய வெளியுறவுச் செயலர் திரு. டேவிட் மிலிபான்ட் இலங்கை செல்வதற்கு கட்சிக்குள் பிரசாரத்தை மேற்கொண்டதில் சிவோன் மக்டொனால் அம்மையாரும், ஜோன் ரையன் அம்மையாரும் பெரும் பங்கு வகித்துள்ளனர். அதேபோல உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் திரு.டேவிட் மிலிபாண்ட்தோன்றியமைக்கும், பிரதமர் திரு கோர்டண் பிரவுண் பேரவையினரை அழைத்து பேசியமைக்கும் ஜோன் ரையன் அம்மையாரின் பங்கும் பெருமளவில் இருப்பது தமிழர்களால் போற்றப்படுகின்றது.
அவ்வாறான ஒரு பணியை கென்சவேட்டிவ் கட்சிக்குள் செய்து முடித்தவர் ரீச்சல் அமையாராவார். தற்போதைய நிலையில் கென்சவேட்டிவ் கட்சி தலைவர்களுக்கு தமிழர்கள் தேசியத்தை ஆதரிக்கும் மேடை பொதுவாக புதியது. ஆனாலும் அம்மேடையில் அக் கசட்சியின் சக்திவாய்ந்த தலைவரான நிழல் வெளியுறவு அமைச்சர் திரு. வில்லியம் கேக் அவர்களை தோன்றச் செய்தமை, ரேச்சல் அம்மையார் தமிழரின் போராட்டத்தை அக் கட்சிக்குள் பலமாக கொண்டு செல்லக்கூடியவர் என்பதை உணர்த்துகின்றது.
இந்த தலைவிகள் தேர்தலில் வெல்ல வேண்டும். எமது நண்பர்களின் வெற்றி எமது வெற்றிசெவோன் மக்டொனா ( மிச்சம் & மோடன் தொகுதி ) தொழிற்கட்சி, ஜோன் றயன் ( என்பீல்ட் வடக்கு தொகுதி ) தொழிற்கட்சி, ரீச்சல் ஜாய்ஸ் ( ஹரோ மேற்கு ) கென்சவேட்சிவ் கட்சி.
Sri Lanka joins international issues in British parties’ focus
Sri Lanka’s ethnic crisis is among international issues that have drawn comment by all three main political parties in Britain ahead of the general election on Thursday. The main opposition Conservative party insisted Sri Lanka “take immediate steps to address the concerns of the Tamil people” and emphasised the importance of “meaningful political reform” for lasting peace. The Liberal Democrats, the second largest opposition party, demanded an end to Sri Lanka’s “land-grabbing” and called for the formation of “an independent body to end all fraudulent claims to land.” The ruling Labour party, which raised war crimes probes in its manifesto, said its 13-year government “had consistently sought to help Sri Lanka achieve a lasting solution and is committed to an inclusive political process.”
The British election is being hard fought, with many polls showing a close, if volatile, race between the three parties, with some analysts even suggesting none of them would be able to secure an outright majority in Parliament.
The texts of statements issued by the parties follow:
Liberal Democrats:
“Liberal Democrats believe it is critical that Sri Lanka should not return to the civil war that plagued the country for 25 years and we strongly support British and international efforts to develop infrastructure and improve the standard of life of Sri Lankans. We believe that reconciliation between the Sinhalese and Tamil communities will be vital to future economic growth and long-term prosperity. We believe both the UK and the EU have an important role to play in supporting and encouraging this process. Liberal Democrats have expressed concern at the continued holding of an estimated 100,000 Tamils in internally displaced persons camps over 10 months since last year’s conflict ended, and has urged the UK government to put pressure on the Sri Lankan government to release them as soon as possible. We also support an investigation into any allegation of war crimes by Sri Lankan armed forces and have called for an end to land-grabbing through the formation of an independent body to end all fraudulent claims to land. President Rajapaksa’s Government must stop abusing the political and judicial system, both in terms of their Sinhalese political opponents and in terms of genuine engagement with democratically elected representatives of the Tamil community. The democratic aspirations of the Tamil people cannot continue to be ignored.”
Conservatives:
Statement by Shadow Foreign Secretary William Hague:
“We welcome the prospect of a future in which Sri Lanka is free from the instability and suffering which has blighted its shores for decades. However we are acutely aware that peace still needs to be won and must be secured if it is to be lasting. For this reason we strongly urge the Sri Lankan government to resolve the difficult political issues that remain and take immediate steps to address the concerns of the Tamil people and those of other minority groups. Meaningful political reform and reconciliation should be an urgent priority but this reform will only hold legitimacy if the democratic aspirations of all Sri Lankans, regardless of ethnicity, can be fulfilled. We believe all communities – Sinhalese, Tamils and Muslims – should play a part in the future of the country if peace is to be secured in the long-term.”
Labour:
Statement by Foreign Secretary David Miliband:
“The UK has consistently sought to help Sri Lanka achieve a lasting solution to hostilities and is committed to an inclusive political process which includes Sinhala, Tamil and Muslim communities. As Foreign Secretary I visited Sri Lanka at the height of the closing days of war to press for an urgent humanitarian ceasefire because this issue is of utmost importance to me. All of us will be relieved that the long and brutal civil war is at last over. Sri Lanka has now an historic opportunity to ensure a lasting peace. Over the last 5 years we have provided over £41 million in assistance to fight poverty and conflict prevention projects. For the thriving Sri Lankan community in the UK, Labour will continue to promote values we share in common. We urge you to use your vote at the next election and make your choice. A choice between Britain building a fairer future for all at home and abroad through leadership on the world stage, or isolating ourselves as our Conservative opponents seek to do.
Text in Labour manifesto:
“We strongly support reconstruction and reconciliation in Sri Lanka. We believe that both the LTTE and the Government of Sri Lanka must be held to account for the loss of civilian life, and we will continue to urge the Sri Lankan Government to fulfil its commitment to a full and fair investigation into war crimes committed in the final months of the civil war.”
புதுமாத்தளனில் வாழ்க்கை எனும் வண்டி - 5
ஏறுங்கள் வண்டியில் புதுமாத்தளனை விட்டுப் போவோம்..
நம் வாழ்க்கை ஒரு பேருந்துவண்டிப் பயணம் போன்றது..
பட்பட்டென்று அடிக்கிறது இதயம் என்னும் இயந்திரம்.. வாழ்க்கை வண்டி ஓடுகிறது.
நம் பூட்டன், பூட்டி வாழ்ந்த காலத்து வாழ்க்கையை பாட்டன் பாட்டி வாழவில்லை.. பாட்டன் பாட்டி வாழ்ந்த காலத்து வாழ்க்கையை நாம் வாழவில்லை..தினமும் புதிய ஊர்கள், புதிய தெருக்கள்..
ஆனால் வாழ்க்கை என்னும் வண்டிக்கும் சாதாரண பேருந்து வண்டிக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
பேருந்துவண்டி புறப்பட்ட இடத்திற்கு திரும்பிப் போகும், வாழ்க்கை வண்டியோ முன்னோக்கி மட்டுமே ஓடுமேயல்லாது ஒரு காலமும் திரும்பி ஓடாது.. இதுதான் அந்த வேறுபாடு.
ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் அவனுடைய வாழ்க்கை வண்டியை ஓட்டும் ஸ்டியரிங் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் வண்டியை ஓடிக்கொண்டிருக்கும்போது கரடுமுரடான பாதைகள், பாதாளங்கள், மலைமுகடுகள், அகழிகள், பனிமலைகள், பூங்காக்கள், மதுபானச்சாலைகள் என்று பல காட்சிகளை வழியில் சந்திக்க நேரிடும்..
அதேவேளை தொடரும் பயணத்தின் இடையில் இளைப்பாற நமக்கு சிறுபொழுது கிடைக்கும்..
அந்த நேரம் வண்டியை பூங்காவிற்கு அருகில் நிறுத்துவோர் இதமான காற்றைச் சுவாசிப்பார்கள், சுகந்தமான மலர்களின் நறுமணத்தை முகர்வார்கள்..
மாறாக மதுபானக் கடைக்கு அருகில் நிறுத்துவோர் போதையில் சிக்குண்டு போவார்கள்.. பின்னர் அவர்களுடைய வாழ்க்கைப் பேருந்து தள்ளாடி தானாகவே விபத்தைச் சந்திக்கும்..
இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது.. வாழ்க்கை என்னும் பேருந்தை திருப்பிச் செலுத்த அனுமதி வழங்காத இயற்கை, அதேநேரம் அதை எந்த வழியால் செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும் உரிமையை நம் கைகளில் கொடுத்திருக்கிறது.
வாழ்க்கை வண்டியை பூங்காவிற்குள் செலுத்துவதும் டாஸ்மார்க் என்னும் தவறணைக்குள்ளால் செலுத்துவதும் அவரவர் எண்ணங்களே..
ஒரு திரைப்படப்பாடல் இதற்கு விளக்கம் தருகிறது..
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே..
நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவிற்கும் போய் வரலாம்..
என்று கூறுகிறது.
வாழ்க்கை மட்டுமல்ல, விடுதலைப் போராட்டமும் ஒரு பேருந்து வண்டிதான். அதை தலைமைச் சாரதியாக இருந்து பிரபாகரன் ஓட்டிச் சென்றார்..
அவர் பயணத்தில் எதிர்பாராத ஓர் ஊர் வந்தது அதன் பெயர்தான் புதுமாத்தளன்..
ஒழிந்துகொள்ள இடமில்லாத நாகதாளிகளும், இராவணன் மீசைகளும் வளர்ந்திருக்கும் மணலும், சேறும் நிறைந்த பொட்டல் வெளி.. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட கூர்மையான அத்தாங்கு போன்ற குடாப்பகுதி..
கடல், தரை, ஆகாயம் என்று சகல வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன.. ஒரேயொரு சுரங்க வழிதான் அவருடைய போராட்ட வாகனம் பயணிப்பதற்கு வழங்கப்பட்டது.
தேறை மீன் கூட்டத்தை கல்லெறிந்து சென்று அத்தாங்கிற்குள் வீழ்த்துவதைப் போன்ற ஒரு காட்சி.. அத்தாங்கிற்குள் போவதைத்தவிர வேறு வழியில்லாத ஒரு வழிப் பயணம்.
நாம் எவ்வளவுதான் வாகனத்தைச் சரியாக ஓட்டினாலும், எதிரில் வருபவன் விபத்தை ஏற்படுத்த வேண்டுமென நினைத்தால் நாம் அந்த விபத்தைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.
சகல பாதைகளும் மறிக்கப்பட்டு, 32 வாகனங்கள் சுற்றிநின்று மோதின.. விடுதலைப் போராட்டம் தவிர்க்க முடியாத விபத்தை புதுமாத்தளனில் சந்தித்தது..
எதிரிகளின் எந்த இராணுவ முகாமைத் தாக்கினாலும் அத்தாங்கின் அந்தத்;தில் ஓர் ஓட்டை வைப்பார் பிரபாகரன். காரணம் எதிரிகள் தப்பிச் செல்ல வேண்டும் என்ற நல்ல மனம் அவரிடம் இருக்கும்.. அதுதான் தமிழர் கண்ட போரியல் நாகரிகமாகும்..
ஓட்டையில்லாத புதுமாத்தளன் அத்தாங்கைப் பார்த்து பிரபாகரன் சிரித்தார்… அத்தாங்கின் அந்தத்தில் நின்ற அமெரிக்கக் கப்பல் ஓடி மறைந்தபோது இன்னொருமுறை சிரித்தார்…
சங்ககாலத்திலேயே தமிழன் கண்டுவிட்ட போரியல் நாகரிகத்தை கேவலம் அமெரிக்கனும், பிரிட்டனும், சீனனும், வடஇந்தியனும் இன்றும் கூட கற்றுக்கொள்ளவில்லையே என்று சிரித்தார்..
தனக்காக அல்ல கேவலமான உலகத்தை எண்ணி நாணித்தலை குனிந்தார்… வெட்கப்பட்டார்..
அவர் கண் முன் ஒரு காட்சி மலர்கிறது..
ஒரு நாள் கரும்புலி வீரன் ஒருவன் வெடிகுண்டு வாகனத்தில் ஏற மறுத்துவிட்டான்.. அந்த நேரம் கொழும்பிற்கு வேறொரு பணியின் நிமிர்த்தம் இன்னொரு கரும்புலி வந்திருந்தான்.. வானத்தில் ஏறி உயிரைத் தியாகம் செய்ய யாருமே இல்லாத வண்டியைப் பார்த்தான்.. கணப்பொழுதும் யோசிக்காமல் அந்த வெடிகுண்டு வாகனத்தை ஓட்டிச் சென்று வீரமரணமடைந்தான்..
இதுவரை உலகில் நடைபெற்ற பல்லாயிரம் போர்களில் அவனைப்போலொரு வீரன் இருந்ததாக அடையாளம் காட்ட முடியாது..
இப்படிப்பட்ட உயிரைத் துச்சமென மதித்த வீரர்கள் எல்லாம் போராடிய இந்தப் புனிதப் போராட்டம் புதுமாத்தளனில் புதைக்கப்பட்டுவிடுமா என்று எண்ணிப் பார்க்கிறார்..
தியாகமே வடிவான போராளிகள்; மண்ணுக்குள் இருக்கிறார்கள்.. அவர்கள் இதைக் காப்பாற்றுவார்கள் என்று உறுதிபட நம்புகிறார்…
இப்படியான நேரத்தில் ஒரு தலைவன் மக்களுக்கு ஏதாவது ஒரு வார்த்தையாவது கூறியிருக்க வேண்டும்.. ஆனால் பிரபாகரனோ ஒரு வார்த்தை கூட தொலைபேசி வழியாக உலக சமுதாயத்தின் முன் கூறவில்லை..
மாவீரரிடம் மட்டும் தனது முடிவை கூறிவிட்டு நடந்தார்…
அன்றொருநாள் கரும்புலி வினோத்திடம், நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன் என்று கூறினார் பிரபாகரன்.
அவன் போகும் போது படலையில் ஓங்கி அடித்தான்.. நீ வரவேண்டும் என்பதற்காக நாம் போகவில்லை.. நீ இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போகிறோம் என்றுவிட்டு போனான்..
அப்படிப்பட்ட மாவீரர்கள் பிரபாகரனை போகவா விடுவார்கள்.. யோசித்துப் பாருங்கள்..
அன்று ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுகிறது என்ற தகவலைக்கூட அவர் கூறவில்லை.. ஆயுதங்கள் மௌனமாக்கப்படுகின்றன என்று மட்டும் கூறினார்..
இப்போது பிரபாகரனின் மொழி மௌனம்தான்…
இயற்கை மௌனமாகத்தான் இருக்கிறது..
காற்றாக, மழையாக, ஒளியாக உலகத்தை ஆட்சி செய்கிறது.. அதன் மொழி மௌனம்தான்..
இருள் 24 மணி நேரமும் இருக்காது..
பிரபாகரன் என்னும் பிரகாச ஒளி இப்புவியில் பரவும்..
இப்படிப்பட்ட ஓர் உன்னத மனிதன் ஏற்றிய விடுதலை விளக்கு அணைந்து போகுமென்று நினைத்து நீங்கள் கண்ணீர்விடலாமா..
வண்டியில் ஏறுங்கள்.. புதுமாத்தளனை விட்டு அமைதியும், சுதந்திரக் காற்றும் வீசும் புதிய ஊர்நோக்கிப் பயணிப்போம்..
ஸ்டியரிங் உன் கையில்தான் இருக்கிறது ஏன் கவலை..
Subscribe to:
Posts (Atom)