Friday 14 January 2011

நோர்வே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அவசர அறிக்கை


1956 ம் ஆண்டிற்க்கு பிறகு கிழக்கு மகாணம் வெள்ளத்தால் பெரும் அழிவை சந்தித்துள்ளது. எமது உறவுகளுக்கான உடனடி உதவிகளை செய்வதற்க்கு நோர்வே வாழ் தமிழீழ மக்களிடம் நாம் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்க்கின்றோம் ஏற்கனவே அம்பாறை மாவட்டத்திலுள் கோணவில் என்ற இடத்தில் பாடசாலையில் தங்கியுள்ள மக்களுக்காக இரண்டு நாளுக்கான உதவியை உடனடியாக வழங்கியுள்ளோம்.

இருந்தபோதும் தாயகத்தில் தென் தமிழீழத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், பொது நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பாதுகாப்பான இடங்கள் நோக்கி தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான உதவிகள் மென்மேலும் தேவைப்படுவதால் அனைவரையும் ஆதரவுக்கரம் கொடுக்குமாறு அன்போடுவேண்டி நிற்க்கின்றோம்

மேலதிகதொடர்புகளுக்கு

Telephone: 004740969620 / 004721381679

Mail:         tronorway@gmail.com

No comments:

Post a Comment