Tuesday 14 December 2010

தேசத்தின் குரல் திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

Memories Of Voice of the Nation
ஈழமக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பாலா அண்ணா அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவுதினம் இன்று.

இடம்: அன்னைபூபதி, றொம்மன் வளாகம்
காலம்: 14.12.2010, செவ்வாய்க்கிழமை

நேரம்: மாலை 18:30 மணி

தமிழர்களின் வரலாறும், தமிழ் மக்களும் சிங்களப் பேரினவாதத்தினால் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில், அதை எதிர்த்து நின்று போராடும் எம் தேசத் தலைவன் திரு. வே. பிரபாகரனுக்குப் பக்க பலமாக நின்று, தன்னையும் ஒரு கெரில்லாப் போராளியாக மாற்றித் தன் வாழ்நாளின் நீண்டகாலப் பகுதியை எம் தேசவிடுதலைக்காக அர்ப்பணித்து, எமது ஈழவிடுதலைப் பயணத்தின் நேர்மையை உலகின் திசைகளெங்கும் கொண்டு சென்று, ஈழமக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பாலா அண்ணாவை எமது தேசியத் தலைவர் அவர்கள் ‘தேசத்தின் குரல்’ எனும் உயர் கௌரவப் பட்டத்தை வழங்கி, அகவணக்கம் செலுத்தி நான்கு ஆண்டுகள் நிறைவுபெறும் இத்தருணத்தில் தேசக் குரல் பாலா அண்ணாவின் நினைவிலென்றும் உலகத் தமிழினம் மூழ்கித் தவிக்கின்றது.
பாலா அண்ணன் அப்படித்தான் உனை நாங்கள் அழைத்தோம்

அன்பாலா! பண்பாலா! ஆளுமைச் சிறப்பாலா!

ஆற்றாத தவிப்பாலா! அயராத உழைப்பாலா!

உள்ளத் துடிப்பாலா! உறவென்ற நினைப்பாலா!

உலகத்து மதிப்பாலா! உணர்ச்சிக் கொந்தளிப்பாலா!

தலைவனின் நட்பாலா! தத்துவத் தொகுப்பாலா!

வித்துவச் செழிப்பாலா! விகடச் சிரிப்பாலா!

பேச்சு வனப்பாலா! பிற பிற நினைப்பாலா!

தேசத்தின் குரல்பாலா! திருக்குறளின் அறப்பாலா!

தமிழன்னை நினை மறப்பாளா!

மாவீரனே! உறுதியுடன் உரைக்கின்றோம் ஈழம்!

உனக்கே காணிக்கை!!!

- நன்றி: அன்புராஜா (anburajabe)

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் காணொளிகள்

1)


2)

3)

4)

5)
6)
 
7)
 
8)
 
9)
 
10)

11) 

12) 

13)

No comments:

Post a Comment