Monday 8 February 2010

ராஜபக்சவை சரித்திர நாயகனாக்கும் பன்னாட்டுப் பன்னாடைகள்


















ஒரு தீரமும் தியாகமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி சகல போர் நியமங்களுக்கு எதிராக போர் புரிந்து மழுங்கடிப்பதற்கு பலநாடுகள் ரஜ்பக்சேக்களுக்கு உதவின. பல நாடுகள் அந்த உதவியைத் திரைமறைவாகவே செய்தன. அதனால் ராஜபக்சேக்கள் தம்மை தாமே ஒரு வீரம் நிறைந்த கதாநாயகர்களாகச் சித்தரிக்கின்றனர். பன்னாட்டு அரங்குகளில் இலங்கைப் பிரச்சனைபற்றி எழுப்பப் பட்ட போதேல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் இலங்கை அரசு ஒரு ஜனநாயக முறைப்படி தெரிந்தெடுக்கப் பட்ட அரசு என்றும் கூறப்படும்.

தனது கையைக் கழுவும் அமெரிக்கா.

இலங்கையில் போர்குற்றம் நடந்தது என்று அறிக்கைவிட்டதன் மூலம் இலங்கை இனக்கொலையால் தனது கைகளில் படிந்த இரத்தத்தை அமெரிக்கா கழுவ முயல்கிறது. அந்த அறிக்கையை எதிர்த்து நிற்பதாக ராஜபக்சேக்கள் கூறியதுடன் போரில் அமெரிக்க விடுதலைப் புலிகளைப் பாதுகாக்க முற்பட்டது என்றும் மீண்டும் அது சரத் பொன்சேக்கவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்க முயல்கிறது என்றும் சிங்கள மக்களை நம்ப வைப்பதில் ராஜபக்சேக்கள் வெற்றி கண்டனர். இந்தப் பன்னாட்டுச் சதிகளை எல்லாம் தம்மால் மட்டுமே முறியடிக்க முடியும் என்றும் தம்பட்டம் அடிக்கின்றனர். இதன் உண்மை அல்ல நாம் அன்றும் இன்றும் என்றும் சிங்களவர் பக்கமே நின்றோம் நிற்கிறோம் என்ற உண்மையை அமெரிக்கா என்றும் வெளிப்படுத்தப் போவதில்லை.

சட்டையைக் கழற்றும் ஐரோப்பிய ஒன்றியம்

விடுத்லைப் புலிகள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி சாமாதனப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வேளை அவர்களைப் பயங்கரவாத இயக்கம் எனப் பட்டியலிட்டு அவர்களைப் பலவீனப் படுத்தியது ஐரோப்பிய ஒன்றியம். அவர்களைன் நிதி மூலங்களை முடக்க இலங்கைக்கு உதவியது ஐரோப்பிய ஒன்றியம். ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஒழிக்க ஜனநாயக அரசுக்கு உரிமை உண்டு என்று வேதம் ஓதிய சாத்தான் ஐரோப்பிய ஒன்றியம். இறுதிப்போரில் சரணடைய வந்தவர்களைக் கொன்றதையும் அப்பாவிகளை உயிரோடு புதைத்ததையும் அறிந்தும் அறியாமல் இருந்து கொண்டு தனது இரத்தக் கறை படிந்த சட்டையை ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகையை இடை நிறுத்துவதன் மூலம் கழற்றி விடப் பார்க்கிறது ஐரோப்பிய ஒன்றியம். வர்த்தகச் சலுகை நிறுத்தினால் தாம் பயப்படப் போவதில்லை பணியப் போவதில்லை என்று முழங்கி வீரர்களாகினர் ராஜபக்சக்கள்.

இந்திய அரசு என்றொரு ஆரியப் பேய்கூட்டம்.

மூடி மறைக்கப் பட்ட ராஜீவ் கொலையின் பின்னணியை இதுவரை அறிய முயலாத இத்தாலிச் சனியாளின் பாவாடைக்குள் முடங்கிய காங்கிரஸ் என்னும் ஆரியப் பேய்களின் அரசு இலங்கைக்கு தமிழ்த் தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க சகல உதவிகளையும் செய்தது. ஆனால் ராஜபக்சக்கள் தாம் இந்தியாவின் போரை நடத்தி வென்று கொடுத்தோம், காங்கிரசை வெல்ல வைத்தோம், இந்தியாவால் முடியாததை நாம் செய்தோம் என்று முழங்கும் போது உண்மையை உரைக்க முடியாமல் மௌனியாக நிற்கிறது. சனல்-4 தொலைக்காட்சி தமிழர்கள் நிர்வாணமாகப் படுகொலை செய்யப் படுவதை அம்பலப் படுத்தியபோது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அது தொடர்பாக உடன் விசாரணைக்கு உத்தரவிடுவதாக அறிவித்தார். இன்றுவரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று பற்றியாரும் அறியார். இலங்கை இனக் கொலையில் இந்தியப் படைகளின் சம்பந்தம் பற்றி வெளிக் கொணரக் கூடிய காணொளிப்பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறியத்தான் அந்த விசாரணையா? அந்தமாதிரி எல்லாம் இலங்கை இனக்கொலைக்கு நேரடித் தொடர்பு உடையதாகக் க்ருதப் படும் ஆரியப் பேய்கள் ராஜபக்சக்கள் இந்தியாவின் போரை நாம் நடத்தி வென்று கொடுத்தோம் என்று மார்தட்டும் போது மௌனியாக நின்று ராஜபக்சேக்களை சரித்திர நாயகர்கள் ஆக்குகின்றன. அவை மட்டுமல்ல இந்திய நிர்பந்தங்களுக்கு அடி பணியாமல் நின்றோம், இந்தியாவை இராஜ தந்திர ரீதியில் ஏமாற்றினோம் என்றுகூட ராஜபக்சக்கள் முழங்கினர்.

No comments:

Post a Comment