Monday 12 September 2011

19.09.2011 சுவிசில் பொங்குதமிழ் - வலுச்சேர்ப்போம் வாருங்கள்
















அன்பான நோர்வே வாழ் தமிழீழ உறவுகளே எமது உறவுகள் மிகவும் கோரமான முறையில் சிறீலங்கா படைகளால் திட்டமிட்டு கொல்லப்பட்ட நிழற்படங்கள் நாளாந்தம் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.மிகவும் அதியுச்ச சித்திரவதைக்குட்பட்டு கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட காட்சிகள் நெஞ்சங்களை பிளக்கின்றது.

இந்த நிலையில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் காத்திரமான பணி கண்முன்னே விரிந்துகிடக்கின்றது.இனமானத்தோடு இறந்த உறவுகளுக்காகவும் சிறைச்சாலைகளில் சித்திரவதையால் துடிதுடிக்கும் சகோதர சகோதரிகளின் விடுதலைக்காகவும் குடும்ப உறுப்பினர்களை இழந்து வீடு இழந்து சொந்த நிலத்தை தொலைத்து ஏக்கத்தில் தவிக்கும் தொப்புள் கொடிகளுக்காகவும் சர்வதேசத்திடம் நீதிகேட்டு சுவிஸ் ஜெனிவாவிலுளள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத்திடலில் தாய்மண்ணின் கடமை உணர்ந்து பொங்குதமிழராய் புறப்படுவோம்.















காலச்சக்கரம் எம் தேசத்தில் நடந்த அநியாயங்களை அலசிபார்த்து சர்வதேசப்பரப்பில் சிறீலஙகாவுக்கு எதிரான கருத்துக்களை விதைத்து வருகின்ற இந்த காலத்தில் அதர்க்கு தண்ணீர் ஊற்றி முளைக்கவைக்கவேண்டிய வலு எம்மிடம்தான் உள்ளது.ஆகவே இந்த மிக முக்கியமான காலத்தில் கருத்து பேதங்களை அருகாக வைத்துவிட்டு இலக்கின் எல்லைக்காக கரம்கோர்த்து உறவுகளின் துயர் கழுவ நோர்வேயிலிருந்தும் பொங்குதமிழுக்காக 19.09.2011 அன்று புறப்படுவோம் இதர்க்கான ஏற்பாடுகளை நோர்வே தமிழா ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்துள்ளது.



மேலதிக தொடர்புகளுக்கு 93850119 அல்லது 96881732

No comments:

Post a Comment