Saturday 15 May 2010

நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம் - இந்தக் காலத்திற்கு ஏற்ற பாடல்


உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்  (உன்னை)


மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா

தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா (உன்னை)


பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா (உன்னை)


மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்


உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

 - பாடலைக்கேட்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment